சென்னை, சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) முதல் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. 2 துறைகள் மீது மானியக் கோரிக்கை விவாதமும் நடக்க உள்ளது. பட்ஜெட் தாக்கல் தமிழக சட்டசபையில் கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 7, 10,11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது. இந்த நிலையில், 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை, 27 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது. இன்று முதல் கேள்வி நேரம் நேற்று மிலாது நபி என்பதால் அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடுகிறது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சட்டசபையில் இதுவரை கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இன்று முதல் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. பொதுவாக, கேள்வி நேரத்தில் 10 கேள்விகள் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், தற்போது 5 கேள்விகள் எடுத்துக்கொள்ளப்படுவதாக தெரிகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறைகளில் இருந்து பதில் வராதது இதற்கு காரணமாக கூறப்படுகிறது. மானியக் கோரிக்கை விவாதம் கேள்வி நேரம் முடிந்ததும் பா.ஜ.க. உறுப்பினர் போஜராஜன், ஊட்டி படகு இல்லத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து பேசுகிறார். அதனைத் தொடர்ந்து, சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் வெ.சம்பத்குமார் ஆகியோர் பேசுகின்றனர். நிறைவாக, தங்களது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/question-hour-begins-in-the-assembly-today-debate-on-demands-for-grants-for-two-departments




