புதுடெல்லி, 30-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் இணை 21-18, 13-21, 8-21 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனான சீனாவின் லியு ஷெங் ஷூடேன் நிங் ஜோடியிடம் போராடி வீழ்ந்து வெண்கலப்ப தக்கத்துடன் திருப்தி கண்டது. இன்று நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் கோடை நரோகா (ஜப்பான்)-அலெக்ஸ் லானிர் (பிரான்ஸ்) மோதுகின்றனர். பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் அன்சே யங் (தென்கொரியா)-அகானே யமாகுச்சி (ஜப்பான்) பலப்பரீட்சை நடத்துகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/othersports/world-badminton-championships-trisha-gayathri-pair-wins-bronze-medal




