திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த தைலாபுரத்தில் அமைச்சர் வன்னி அரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ".வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட மக்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்தது தி.மு.க. அரசுதான். திருநெல்வேலி கவின் படுகொலை வழக்கில் விடுதலை சிறுத்தைகள் போராட்டம் நடத்திய பிறகுதான் குற்றவாளி கைது செய்யப்பட் டார். அவரது மனைவி கிருஷ்ணகுமாரி இன்னும் கைது செய்யப்படவில்லை. வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். மலேசியாவில் முனைவர் பட்டம் படிக்கும் மாணவர் பாரதிதாசன், தனது 2-ம் ஆண்டு படிப்பிற்கு கல்வி உதவித்தொகையை தமிழக அரசு வழங்கவில்லை என்று கூறி வீடியோ வெளியிட்டார். இதற்காக பாரதிதாசன் குடும்பத்தை உளவுத்துறை போலீஸ் மூலம் மிரட்டி யதாக கூறுவது திட்டமிட்ட அவதூறு. அவரது பாதுகாப்புக்கும், படிப்புக்கும் நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். அவர் செலவு செய்த தொகைக்கு உரிய ரசீது அனுப்பாவிட்டாலும் கல்வி நலனை கருதி அவர் கேட்ட முழு தொகையையும் அனுப்பி வைத்துள்ளோம்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/allegations-that-student-bharathidasan-threatened-a-family-are-a-calculated-act-of-slander-minister-vanni-arasu




