மதுரை மாநகர் சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணையிலிருந்து நாள்தோறும் 1.9 லட்சம் லிட்டருக்கு மேல் பால் விநியோகம் செய்யப்படுகிறது. மதுரை புறநகர் பகுதியான உசிலம்பட்டி, கள்ளிக்குடி, வாடிப்பட்டி, கொட்டாம்பட்டி, சிலைமான், வலையங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மாநகரப் பகுதிகளிலும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவின் பால் பூத்களுக்கு பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் மதுரை மாவட்ட முழுவதும் ஆவின் டெப்போக்களில் விற்பனை செய்யப்படும் நீலநிற பால்பாக்கெட்டுகளில் ப்ளாஸ்டிக் மற்றும் குளோரின் போன்ற நெடி வீசுவதாகக் கூறி மாடக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறையினர் மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆவின் டெப்போக்களில் இருந்து நீலநிற பால்பாக்கெட்டுகளில் உள்ள பால் மாதிரிகளைச் சேகரித்தனர். மேலும் சாத்தமங்கலம் ஆவின் பால்பண்ணையில் இருந்தும் பால் மாதிரிகளை எடுத்துசென்று ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். குழந்தைகள், நோயாளிகள் எனப் பல்வேறு தரப்பினருக்கும் பிரதானமாகப் பயன்படுத்தபடும் ஆவின் பால்பாக்கெட்டுகளில் மதுரை மாவட்டத்தில் ப்ளாஸ்டிக் மற்றும் குளோரின் நெடி வருவதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவின் நிறுவனம் இது குறித்து மதுரை ஆவின் நிர்வாகம் தரப்பில் அளித்த விளக்கத்தில், “ஆவின் நீலநிற பால்பாக்கெட் தொடர்பாகப் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. நீலநிற பால்பாக்கெட்டுகள் பிளாஸ்டிக் பேப்பர் ரோலில் ஏற்பட்ட குறைபாடுகளால் நெடி வீசியது தெரியவந்து தற்போது புதிய பால்பாக்கெட்டுகள் மாற்றப்பட்டுள்ளது. பால்பாக்கெட்டுகளைத் தரமின்றி அளித்த நிறுவனத்தின் மீது அபராதம் விதிப்பா, நடவடிக்கையா என்பது முழுமையான விசாரணைக்குப் பின்னர் முடிவு அறிவிக்கப்படும்” என்றனர். 'பட்டதாரிகள் ப்ளம்பர்கள் ஆக வேண்டுமா?' - தவெக அமைச்சரின் புதிய சமூக நீதி? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/madurai-complaint-regarding-plastic-odor-in-aavin-blue-packet-milk




