சென்னை, சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் ரூ.1,299 கோடி வருவாய் ஈட்டி 3-வது இடத்தை பெற்றுள்ளது. ரெயில்வே துறையில் நவீன கட்டமைப்புகள் மற்றும் பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால், ரெயில்களின் இயக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெற்கு ரெயில்வே பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினர் ஜாபர் அலி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- 3-வது இடம் கடந்த நிதியாண்டில், பயணிகள் பிரிவில் அதிக வருவாய் ஈட்டிய நாட்டின் முதல் 10 ரெயில் நிலையங்களில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையமும் இடம்பெற்றுள்ளது. அதிக வருவாய் ஈட்டிய ரெயில் நிலையங்களின் பட்டியலில் சென்னை சென்டிரல் 3-வது இடத்தை பிடித்துள்ளது. அதிக வருவாய் டெல்லி ரெயில் நிலையம் ரூ.3,337 கோடி வருவாயுடன் முதலிடத்திலும், மேற்கு வங்காளத்தில் உள்ள ஹவுரா ரெயில் நிலையம் ரூ.1,692 கோடி வருவாயுடன் 2-வது இடத்திலும் உள்ளன. சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் ரூ.1,299 கோடி வருவாய் ஈட்டி 3-வது இடத்தை பெற்றுள்ளது. ரெயில்வேயில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளுக்கு கிடைத்து வரும் வரவேற்பை இது வெளிப்படுத்துகிறது. இவ்வாறு ஜாபர் அலி தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-central-shows-massive-revenue-3rd-place-in-the-country



