Fuld artikel
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இவரது மகன் பார்த்திபன் வயது 19. கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். அருகிலுள்ள சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிகாந்தன். மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர். 16 வயது மைனரான இவரது மகள் 12ம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரியில் சேர இருந்தார். வெவ்வேறு ஊராக இருந்தாலும் பார்த்திபன், மாணவி இருவரது வீடும் 200 மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ளது. பார்த்திபனும் மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் இரு வீட்டுக்கும் தெரிந்துள்ளது. பார்த்திபன் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் மாணவி வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. லட்சுமி காந்தன் தரப்பில் பார்த்திபன் குடும்பத்தை கடுமையாக பேசியுள்ளனர். `சாதி மறுப்புத் திருமணங்களும், தொடரும் ஆணவக் கொலைகளும்!' - கர்நாடகாவைப் பின்பற்றுமா தமிழ்நாடு? இந்நிலையில், நேற்று காலை பார்த்திபன் தரப்பில் பொறையாறு காவல் நிலையத்தில் லட்சுமிகாந்தன் குடும்பத்தினர் மீது புகார் கொடுத்துள்ளனர். லட்சுமி காந்தன் தரப்பிலும் புகார் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை இருவரது வீட்டுக்கு அருகில் உள்ள கீற்றுக் கொட்டகையில் பார்த்திபனும், மாணவியும் மர்மமான முறையில் இறந்த நிலையில் தூக்கில் தொங்கியுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். பார்த்திபன் குடும்பத்தினர் ஆணவ கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். மேலும் ஆத்திரத்தில் சிறுமி வீட்டின் முன்பகுதி, டூவீலர்களை அடித்து சேதப்படுத்தினர். இதனால் சம்பவ இடத்தில் 30 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இது விசாரித்த போது, பட்டியல் இளைஞரான பார்த்திபன், மாற்று சமூகத்தைச் சேர்த்த மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இதனை மாணவி வீட்டில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இப்பிரச்னை தொடர்ந்த நிலையில் நேற்று இரவு இருவரும வீட்டில் இல்லை என்கிறார்கள். வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு சென்றார்களா என்று தெரிய வில்லை. இருவரும் நல்ல உடை அணிந்திருந்த நிலையில் அருகருகே தூக்கில இறந்து தொங்கினர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆணவக் கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வரும். போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor




