சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்தது. தங்கம் விலை தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன் இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில், இந்த வார தொடக்கத்தில் இருந்தே ஏற்றத்தை கண்டுள்ளது. அதன்படி, கடந்த திங்கட்கிழமை ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 150-க்கும். பவுன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. நேற்று முன் தினம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13 ஆயிரத்து 220-க்கும், பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 760-க்கும் விற்பனையானது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,07,440-க்கும், கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,430-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்றைய தங்கம் விலை இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-continue-to-rise-what-is-the-situation-today




