மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தீவிரமாக களமாடி வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், நேற்று சேலத்தில் செய்தியாளரைச் சந்தித்து பேசுகையில், "மயிலாடுதுறை சாத்தங்குடி கிராமத்தில் நடந்த காதலர்கள் தற்கொலை சம்பவத்தை சிலர் ஆணவக் கொலை என திரித்துக் கூறுவது சரியானது அல்ல. கொலையாக இருந்தாலும் தற்கொலையாக இருந்தாலும் ஆணவக் கொலையாக இருந்தாலும் அது தவறுதான். தற்கொலையை ஆணவக் கொலையாக திரிப்பது தவறான செயல். இந்த விவகாரத்தில் பதற்றமானச் சூழலை உருவாக்கி, ஒரு சில அமைப்புகள் ஆதாயமடைய முயல்கின்றன. பொறுப்பில் இருக்கும் சில தலைவர்கள் தவறான செய்திகளை பரப்புவது தவறான முன்னுதாரணமாக ஆகிவிடக் கூடாது. அன்புமணி மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பையோ நடுவர் மன்ற தீர்பையோ கர்நாடக அரசு மதிப்பதில்லை. ஆனால், இந்த விஷயத்தில் கவனம் செலுத்தாமல் யானை பேரம், குதிரை பேரம் நடந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில். அனைத்து கட்சிகளையும் கூட்டி, மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/anbumani-ramadoss-press-meet-at-salem




