சென்னை, இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க மொத்தம் 25,000-க்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கிராம அஞ்சல் பணியாளர்கள், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் / கிளை போஸ்ட் பணிகள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் விண்ணப்பிக்க முடியும். தேர்வு எதுவும் கிடையாது. இந்த பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு: பணி நிறுவனம்: தமிழ்நாடு அஞ்சல் துறை காலி பணியிடங்கள்: 2,095 பதவி: கிராமின் தாக் சேவக் (ஜி.டி.எஸ்.) கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி. 10-ம்வகுப்பு வரை உள்ளூர் மொழியை படித்திருக்க வேண்டும். கணினி மற்றும் சைக்கிள் ஓட்டும் திறனும் அவசியம். வயது: 21-9-2026 அன்றைய தேதிப்படி 18 முதல் 40 வயது வரை தேர்வு முறை: மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதி பட்டியல் (மெரிட் லிஸ்ட்), சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்ப நடைமுறை: 31-8-2026 முதல் 19-9-2026 வரை விண்ணப்பிக்கலாம். 23-9-2026 முதல் 24-9-2026 வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். முழு விவரங்களுக்கு: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/education-and-employment/jobs-in-the-postal-department-2095-vacancies-in-tamil-nadu-candidates-who-have-completed-class-10-can-apply




