பாமக எம்எல்ஏ செளமியா அன்புமணியை நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பாராட்டி இருக்கிறார். சட்டமன்றத்தில் மக்களின் பிரச்னைகளைச் சரியான தரவுகளோடு சௌமியா அன்புமணி பேசி வருகிறார். பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நேற்று துணை சபாநாயகர் ரவிசங்கரும் சட்டமன்றத்தில், “வரலாற்று சிறப்புமிக்க இந்தப் பேரவையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி இந்த அவையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? சௌமியா அன்புமணி அந்த 10 நிமிடங்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? தன்னுடைய தொகுதி மக்களுக்கு என்னென்ன சொல்ல வேண்டும் என்பதை செளமியா அன்புமணியிடம் இருந்து நாம் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும். காமராஜருக்கு மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதா? - காங்கிரஸ் MLA குற்றசாட்டிற்கு தங்கம் தென்னரசு பதிலடி தேவையில்லாத சர்ச்சைகள், தேவையில்லாத இடைச்சொற்கள் இதெல்லாம் இல்லாமல் முழுக்க முழுக்க 100 சதவீதம் சமூதாய ரீதியாகதான் அவர் பேசுகிறார்” என்று செளமியா அன்புமணியைப் பாராட்டி பேசியிருந்தார். தற்போது நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பாராட்டி இருக்கிறார். செளமியா அன்புமணி இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "Excellent. சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை மிகச் சரியாகவும், துல்லியமான தகவல்களோடும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் சகோதரி சௌமியா அன்புமணி அவர்களைப் பாராட்டுகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/kamal-haasan-praises-sowmiya-anbumani-for-speech-in-tn-assembly




