ஆமதாபாத், பாரா உலக வில்வித்தை சீரிஸ் (நிலை 3) போட்டி ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் தோமன் குமார்- ஷியாம் சுந் தர் ஸ்வாமி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 152-139 என்ற புள்ளி கணக்கில் ஈராக்கை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. இதேபோல் ஆண்களுக்கான ரிகர்வ் அணிகள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஹர்விந்தர் சிங்- விஜய் சன்டி அடங்கிய இந்திய அணி 6-2 என்ற கணக்கில் சுலோவக்கியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. பெண்களுக்கான ரிகர்வ் அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் பாவ்னா- பூஜா ஆகியோரை கொண்ட இந்திய அணி 0-6 என்ற கணக்கில் சீனாவிடம் தோற்று வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி கண்டது. காம்பவுண்ட் அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஷீத் தல் தேவி- பாயல் நாக் ஜோடி (இந்தியா) சீனாவிடம் தோற்று பதக்க வாய்ப்பை பறிகொடுத்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/othersports/para-world-archery-india-wins-2-gold-medals




