லண்டன், இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து 290 ரன்கள் இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மழையால் ஆட்டம் பாதிப்பு இதையடுத்து, பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் களமிறங்கி விளையாடி வருகிறது. ஆட்டத்தின் 2வது நாளான இன்று பாகிஸ்தான் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் ரிஸ்வான் 1 ரன்னிலும், அசான் அவாய்ஸ் 43 ரன்னிலும் களத்தில் உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/england-pakistan-2nd-test-rain-delays-play




