மதுரை திருநகரில் இரண்டாவது நூலகத்தைத் திறந்துள்ளார், மதுரை முத்து. தன்னுடைய பூர்வீக கிராமத்தில் ஏற்கெனவே ஒரு நூலகத்தை நடத்தி வரும் நிலையில், இரண்டாவது நூலகத்தை சாலமன் பாப்பையாவை வைத்து திறந்து வைத்திருக்கிறார். முத்துவிடம் பேசினோம். ''நான் படிச்சிட்டிருந்த காலத்துல புத்தகம் வாங்க காசும் கிடையாது, ஊர்ல லைப்ரரியும் கிடையாது. மதுரை பொது லைப்ரரிக்கு வந்து நோட்ஸ் எடுத்துட்டுப் போவாங்க. என்னுடைய அண்ணனான பொன் மாணிக்க வேல்லாம் அப்படி படிச்சுதான் போலீஸ் ஆபீஸர் ஆனார். என்னையும் போட்டித் தேர்வுக்குப் படிக்கச் சொன்னாங்க வீட்டுல. ஆனா நம்ம ரூட் மாறிடுச்சு. டிவிக்கு வந்து நாலு காசு சம்பாதிக்கத் தொடங்கினதுமே நம்மைச் சுத்தியிருக்கிற முடியாதவங்க நாலு பேருக்கு ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அரசியல் அது இதுன்னு பெரிய பிளான்லாம் பின்னாடி இல்ல. நம்மால பண்ண முடியும்கிற போது அதைச் செய்யலாமேனுதான். மதுரை முத்து இந்த ஏரியாவுல போட்டித் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் அதிகம் இருக்கறதாலதான் படிப்புக்கு முக்கியத்துவம் தர நினைச்சேன். கிராமத்துல ஏற்கெனவே திறந்த லைப்ரரியையும் நிறையப் பேர் பயன்படுத்திட்டிருக்காங்க. இந்தச் சூழல்லதான் திருநகர்ல திரும்பவும் ஒரு லைப்ரரியை, நூலகத்துக்கே உரிய சூழலுடன் தொடங்கியிருக்கோம். சாலமன் பாப்பையா எங்க ஊர்க்காரர். அதுவும் பேராசியர்ங்கிறதால அவர்கிட்ட கிராமத்துல லைப்ரரி திறந்தது பத்திச் சொல்லியிருந்தேன். `வாத்தியாரா இருக்கிற நானே செய்ய மறந்துட்ட விஷயம்யா இது. நீ பண்றது ரொம்ப சந்தோஷமா இருக்குய்யா. அடுத்து ஏதாவது செஞ்சா அப்ப சொல்லுய்யா. என்னால் முடிஞ்ச உதவியப் பண்ணுறேன்'னு சொல்லியிருந்தார். அந்த ஒரு வார்த்தையைப் பிடிச்சு வச்சுகிட்டேன். திருநகர்ல நூலகம் திறக்கணும்னு முடிவு செய்ததுமே அவரை வச்சே திறந்தா என்னனு தோணுச்சு. தொண்ணூறு வயசைக் கடந்துட்டார். சாலமன் பாப்பையா பொது நிகழ்ச்சி எதுலயுமே கலந்துக்கிடுறதில்லை. எப்பவுமே வர்ற சன் டிவி பட்டிமன்றத்துலகூட கலந்துக்க முடியாம ராஜா நடுவராகிட்டார். அதனால தயங்கியபடியேதான் கேட்டேன்.` பட்டிமன்றத்துக்கு ரிட்டயர்டுமென்ட் கொடுத்திருக்கலாம். கொடுத்த வாக்கை மறக்க கூடாதுல்லய்யா, தேதியச் சொல்லுய்யா, வந்திடுறேன்'னு சொன்னபடி சரியா வந்து திறந்து வச்சார். அவர் நிகழ்ச்சிக்கு வந்தது பலருக்கும் ஆச்சர்யமா இருந்தது. எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்தது'' என்கிறார். `பத்துக்கு பத்து வீட்ல மொத்த குடும்பமும் வசிச்சதை நினைச்சா.' - புதுமனை புகுந்த நடிகர் தங்கதுரை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://cinema.vikatan.com/television/madurai-muthu-opened-a-library-in-madurai




