பாட்னா, நேபாளம் - திபெத் எல்லையில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால், பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அதிபயங்கர வெள்ளப்பெருக்கில், ஆற்றின் கரையோர கட்டிடங்கள், பாலங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை கண்இமைக்கும் நேரத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்திருக்கும் நிலையில், மேற்கொண்டு ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. காயம் அடைந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நேபாள வெள்ளத்தின் எதிரொலியாக, இந்தியா-நேபாளத்தின் எல்லையில் அமைந்திருக்கும் மாநிலமான பீகாருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கங்கையின் கிளை ஆறுகளான கோசி, கண்டக் ஆறுகள் நேபாளத்திலும், பிகாரிலும் ஓடுகின்றன. இந்த ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பீகார் மாநிலத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேபாள எல்லையையொட்டிய பகுதிகளில் பீகார் முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். இது தொடர்பாக சாம்ராட் சவுத்ரி ‘எக்ஸ்’ தளத்ஹ்டில் வெளியிட்டுள்ள பதிவில், “நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை கருத்தில் கொண்டு பகஹா, வால்மீகி நகர், பெட்டியா, மோதிஹாரி உள்ளிட்ட பிஹாரின் எல்லைப் பகுதிகளில் வெள்ள சூழல் குறித்து வான்வழி ஆய்வு செய்தேன்” என்று பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/in-the-wake-of-floods-the-bihar-chief-minister-conducts-an-aerial-survey-by-helicopter-near-the-nepal-border




