டோக்கியோ, ஆசிய விளையாட்டு பெண்கள் டி20 அரையிறுதியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆசிய விளையாட்டு போட்டிகள் 20வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடர் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கும் முன்பே கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கைப்பந்து போன்ற விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. கிரிக்கெட் இதனிடையே, ஆசிய விளையாட்டில் பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 8 அணிகள் மோதின. இதில் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை அணிகள் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தன. பாகிஸ்தான் - இலங்கை ஆசிய விளையாட்டில் பெண்கள் டி20 கிரிக்கெட் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. ஜப்பானின் நிஷின் நகரில் உள்ள கொரோகி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் 177 ரன்கள் இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஆயிஷா ஷபார் அதிகபட்சமாக 71 ரன்கள் குவித்தார். இலங்கை வெற்றி இதனை தொடர்ந்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை 17.5 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றிபெற்றது. இலங்கை கேப்டன் சாமரி அத்தபட்டு 83 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டில் பெண்கள் டி20 கிரிக்கெட் பிரிவில் இறுதிப்போட்டிக்குள் இலங்கை நுழைந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/asian-games-sri-lanka-enter-final-after-defeating-pakistan




