அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை.14) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். முதல்வர் விஜய்யை விமர்சித்து பேசியிருக்கும் அவர், "அண்மையில் கரூர் சென்றிருந்த முதல்வர் விஜய் திமுக - அதிமுக கூட்டுக்களவாணி என்று விமர்சனம் செய்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய வார்த்தை. முதல்வர் விஜய் தான் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்ப பேச வேண்டும். முதல்வர் விஜய் அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களை திருடும் விஜய் தான் களவாணி. முதல்வர் விஜய் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை. வெறும் பஞ்ச் டயலாக் பேசி வருகிறார். 4 கால்கள் இருந்தால் தான் நாற்காலி நிற்கும். விஜய்யின் நாற்காலியில் ஒரு கால் இரவல் கால். காளி வெங்கட்: 'திரும்ப ஸ்கூலுக்குள்ள போகும்போது வந்த பதற்றம் இருக்கே!' - கழுகுமலை ஸ்கூல் ரீயூனியன் ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பாளருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பதவி கொடுத்து புதுமை படைத்திருக்கிறார். இன்னும் கொஞ்சநாளில் அவரது மேக்கப் மேனுக்கும் அரசு பதவி கொடுத்து விடுவார். எடப்பாடி பழனிசாமி திமுக - அதிமுக கூட்டணி என்பதே கட்டுக்கதை. திமுக தீயசக்தி என்பதே எனது நிலைப்பாடும். தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் உள்ளது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதிமுக குரல் கொடுக்கும்" என்று பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/admk-edappadi-palanisamy-slams-tvk-vijay




