கராகஸ், தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு வெனிசுலா. இந்நாட்டில் கடந்த மாதம் 24ம் தேதி அடுத்தடுத்து 2 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 என பதிவான இந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பலி எண்ணிக்கை 4,700ஐ கடந்தது இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,700ஐ கடந்துள்ளது. அதன்படி, நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,734 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நிலநடுக்கத்தில் 16,740 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதேபோல், நிலநடுக்கத்தால் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதேவேளை, நிலநடுக்கம் ஏற்பட்டு 3 வாரங்கள் கடந்த நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/venezuela-earthquake-death-count-rises-to-4734




