வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, 26 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் இந்திய செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக். மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிந்தேந்திர சிங் உடனான பேச்சுவார்த்தைக்குப் பின், நேற்று முன்தினம் (ஜூலை 24) உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார். தற்போதும் சிகிச்சையில் தான் இருக்கிறார் சோனம் வாங்சுக். தர்மேந்திர பிரதான் தற்போது பதவி விலகி உள்ளதை வரவேற்று தனது எக்ஸ் பக்கத்தில் சோனம் வாங்சுக் பதிவிட்டிருப்பதாவது. சோனம் வாங்சுக் பதிவுதர்மேந்திர பிரதான் விலகல்: 'கரப்பான் பூச்சிகள் வென்றன; இன்னும் 2 கோரிக்கைகள் நிலுவை' - CJP Reactions "இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி! நேரடி ஜனநாயகம். தெருக்களிலிருந்து நேரடியாக வென்றெடுக்கப்பட்டிருக்கிறது! இது அமைதி, பொறுமை மற்றும் விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி! வாழ்த்துகள் CJP! வாழ்த்துகள் நாட்டின் Gen Z தலைமுறையே! பயத்தையும், பயத்தைப் பற்றிய பயத்தையும் தூக்கியெறிந்துவிட்டு நாட்டின் அனைத்து மூலைமுடுக்குகளிலிருந்தும் வீரியத்துடன் கிளர்ந்தெழுந்த அனைத்துக் குடிமக்களுக்கும் நன்றிகள்! பொறுப்புணர்வை உறுதி செய்தாச்சு, இனி சீர்திருத்தங்களை நோக்கி!" முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/dharmendra-pradhan-resignation-welcomed-by-activist-wangchuk




