சென்னை, இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் லோக்கல் பேங்க் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு; பணியிடங்கள்: லோக்கல் பேங்க் ஆபிசர் -250 தமிழ்நாடு - 100, கர்நாடகா - 50, மகாராஷ்டிரா - 50, குஜராத் - 50 கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி வயது வரம்பு: 20 வயது முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.48,480 - 85,920 வரை வழங்கப்படும் தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழித்தேர்வு, நேர்முகத்தேர்வு, விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 100 பணியிடங்களுக்கும் தேர்வாக வேண்டும் என்றால் தமிழ் கட்டாயம் தெரிந்து இருப்பது அவசியம். விண்ணப்ப கட்டணம்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்; விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு ரூ.175 கட்டணம் ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.08.2026 கூடுதல் விவரங்களுக்கு: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/education-and-employment/jobs-at-indian-overseas-bank-100-vacancies-in-tamil-nadu-alone-apply-immediately




