டாக்கா, வங்காள தேசத்தின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நஹித் ராணாவை வரும் பிக் பாஷ் லீக் தொடரில் பார்க்கும் வாய்ப்பு தற்போது குறைந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்தத் தொடரில் அவரை ஒப்பந்தம் செய்ய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் மெல்போர்னைச் சேர்ந்த ஒரு அணி ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், வங்காள தேச கிரிக்கெட் வாரியம் அவருக்கு வெளிநாட்டு லீக்கில் விளையாடுவதற்கான அனுமதியை வழங்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் நெருக்கடியான சர்வதேச போட்டி அட்டவணை. வரும் பிக் பாஷ் தொடர் டிசம்பர் 12 முதல் ஜனவரி 26 வரை நடைபெற உள்ளது. இதே காலகட்டத்தில் வங்காளதேச அணி முக்கியமான சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர் அக்டோபரில் நடைபெற உள்ளது. அதன் பின்னர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் என தொடர்ந்து போட்டிகள் உள்ளன. குறிப்பாக தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகள் உள்ளன. இந்தப் போட்டிகள் பிக் பாஷ் நடைபெறும் காலகட்டத்துடன் நேரடியாக மோதக்கூடியதால், நஹித் ராணாவை வெளிநாட்டு லீக்கிற்கு அனுப்ப வங்கதேச கிரிக்கெட் வாரியம் தயக்கம் காட்டுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/doubts-remain-over-nahid-rana-getting-permission-to-play-in-the-big-bash-league




