புதுடெல்லி, நாடு முழுவதும் வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, விலையைக் கட்டுப்படுத்தவும் தடையின்றி விநியோகம் செய்யவும் மத்திய அரசு ‘வெங்காய எக்ஸ்பிரஸ்’ (கந்தா எக்ஸ்பிரஸ்) என்ற சிறப்பு சரக்கு ரெயில்களை மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளது. கிடுகிடுவென உயர்ந்த வெங்காய விலை நாடு முழுவதும் உணவிற்கு பயன்படுத்தப்படும் முக்கியமான உணவுப் பொருள்களில் ஒன்று வெங்காயம். தற்போது வெங்காய உற்பத்தியில் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, நாடு முழுவதும் சில்லறை விற்பனையில் இதன் விலை சுமார் 59% வரை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.58 முதல் ரூ.60 வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் துரித நடவடிக்கை விலை உயர்வைச் சமாளிக்க, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மூலம் வெங்காய எக்ஸ்பிரஸ் (கந்தா எக்ஸ்பிரஸ்) ரெயில்களை இயக்கி வருகிறது. மராட்டியத்தின் நாசிக் போன்ற முக்கிய உற்பத்தி மையங்களிலிருந்து டெல்லி, சென்னை, மதுரை, கொச்சி மற்றும் குவகாத்தி ஆகிய நகரங்களுக்குப் பல டன் வெங்காயம் தடையின்றி கொண்டு செல்லப்படுகிறது. மானிய விலையில் விநியோகம் இவ்வாறு கொண்டு வரப்படும் தரமான வெங்காயம், பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் கிலோ ரூ.35 என்ற மானிய விலையில் கூட்டுறவு அங்காடிகள் மற்றும் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. சந்தையில் விலை முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை இந்த சிறப்பு ரெயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/onion-express-special-train-operated-to-curb-price-rise



