சென்னை, சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது; கடந்த 2020ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் இல்லை. போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்ததால்தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிக்கிறது. திமுக ஆட்சியில் போதைப்பொருள், பாலியல் வன்கொடுமை அதிகரித்தது. திமுக ஆட்சியில் போக்சோ வழக்குகள் 40 சதவீதம் அதிகரித்துள்ளன. திமுக ஆட்சியில் காவல்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் பேசுகிறேன். தவெகவின் அறிக்கை அல்ல. போதைப்பொருள் அதிகரிப்பு காரணமாகத்தால் திமுகவை மக்கள் தூக்கி எரிந்துள்ளனர். தவெக ஆட்சியில் போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர் கொலை வழக்கில் காவல்துறையின் அறிக்கையா? அல்லது இறந்தவர்களின் தாயா? என்றால், எங்கள் முதல்வர் அந்த தாயின் பக்கம் தான் இருப்பார். எந்த அழுத்தத்திற்கும் இடம் தரமாட்டோம்.” இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/rise-in-drug-abuse-and-sexual-violence-under-dmk-rule-aadav-arjunas-allegation




