புதுடெல்லி கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜி.எஸ்.டி., வசூல் ஜூலை மாதத்தில் மொத்த ஜி.எஸ்.டி., வசூல் ரூ.2,11,950 கோடி பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் வசூலான ரூ.1,83,660 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 15.4 சதவீதம் அதிகமாகும். வலுவான வளர்ச்சி உள்நாட்டு பரிவர்த்தனைகளில் இருந்து கிடைத்த ஜி.எஸ்.டி., வரி வசூல் கணிசமாக உயர்ந்துள்ளது. அதேபோல், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீதான வரி வசூலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மொத்த வரி வசூல் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து மேம்பட்டு வருவதும், நுகர்வு மற்றும் வர்த்தக பரிவர்த்தனைகள் அதிகரித்திருப்பதும் வரி வசூல் உயர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/july-gst-collection-up-15-percent




