கோவை, கோவை மாவட்டம் சிறுமுகை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் பாகுபலி என்று அழைக்கப்படும் காட்டுயானை சுற்றித்திரிகிறது. அந்த யானை நேற்று முன் தினம் இரவு சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓடந்துறை காப்பு காட்டு பகுதியில் இருந்து வெளியேறி பாலப்பட்டி அண்ணாநகர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சத் தமிட்டும், டார்ச் லைட் அடித்தும் காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/baahubali-elephant-enters-residential-area-public-alarmed




