சேலம், கரூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு-செங்கோட்டை ரெயில் சேவை மாற்றப்பட்டு உள்ளது. பராமரிப்பு பணி ஈரோடு-கரூர் வழித்தடத்தில் ரெயில்வே பாலங்களின் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை மறுநாள் (சனிக்கி ழமை) ஈரோடு-செங்கோட்டை உள்பட சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதாவது, திருச்சியில் காலை 7.25 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயில் (வண்டி எண்-56809) நாளை மறுநாள் கரூர் ரெயில் நிலையத்துடன் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக கரூரில் இருந்து ஈரோடு வரை அந்த ரெயில் இயக்கப்படாது. கரூர் வரை. இதேபோல், ஈரோட்டில் இருந்து நாளை மறுநாள் மதியம் 2 மணிக்கு புறப்பட வேண்டிய ஈரோடு-செங்கோட்டை ரெயில் (16845) கரூரில் இருந்து மதி யம் 3.05 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் ஈரோடு சந்திப்பில் இருந்து கரூர் சந்திப்பு வரை இயக்கப்படாது. அதேபோல், மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து தினமும் காலை 5.20 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை-ஈரோடு ரெயில் (16846) கரூர் ரெயில் நிலையம் வரை இயக்கப்படும். கரூரில் இருந்து ஈரோட்டிற்கு இயக்கப்படாது என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-the-erode-sengottai-train-service




