தேனி, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் வருசநாடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 98 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில், கிராம மக்கள் வெளியேற்றப்பட உள்ளதாக பரவி வரும் தகவலில் உண்மை இல்லை என மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் விவேக் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். 4,601 பேர் ஆக்கிரமித்துள்ள வனத்துறைக்கு சொந்தமான 5,072 ஏக்கர் நிலங்களை மட்டுமே மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும், பட்டா வைத்துள்ள வீடுகள், விவசாய நிலங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார். முழுமையாக வன ஆக்கிரமிப்பில் உள்ள குறிப்பிட்ட குக்கிராமங்கள் மட்டுமே நடவடிக்கைக்கு உட்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் வனத்தை மட்டுமே நம்பி 75 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் தகுதியானவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் வன உரிமை பட்டா வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/are-people-from-98-villages-in-meghamalai-being-evicted-forest-department-clarifies




