சென்னை அடையாறு எஸ்.பி.ஐ என்.ஆர்.ஐ கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங் மீது கட்டட உரிமையாளரான கயல்விழி அழகிரி தாக்குதல் நடத்தியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ ரீஜினல் பிசினஸ் ஆபீஸ் (RBO-II) தலைமை மேலாளர் நமச்சிவாயம் கடந்த ஜூலை 21-ஆம் தேதி அளித்துள்ள புகாரில் இந்தக் குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளது. புகாரின்படி, அடையாறு எஸ்.பி.ஐ என்.ஆர்.ஐ கிளை செயல்பட்டு வரும் கட்டடத்தில் உள்ள லிஃப்ட் பழுதடைந்திருந்ததாகவும், அதை சரிசெய்யுமாறு கட்டட உரிமையாளர் கயல்விழி அழகிரியின் பிரதிநிதியை பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் பதில் கிடைக்காததால், கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங் நேரடியாக கயல்விழி அழகிரியிடம் தகவல் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கயல்விழி அழகிரி, வங்கிக் கிளைக்கு நேரில் வந்து கிளை மேலாளரை ஆபாசமாக திட்டியதுடன், அவரை தாக்கி, மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி.ஐ தரப்பில் போலீஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/trending/kayalvizhi-alagiri-faces-assault-complaint-from-sbi-bank-manager




