மதுரை, மதுரை மாவட்டம் செல்லூர் கண்மாய்க்கரையில் அமைந்துள்ள ஆலமரத்திற்கு 107-வது பிறந்தநாளை மாணவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கேக் வேட்டி கொண்டாடினர். பசுமை திருவிழா கொண்டாட்டம் மதுரை மாவட்டம் மீனாம்பாள்புரம் செல்லூர் கண்மாய்க்கரை பகுதியில் நூற்றாண்டு கடந்து கம்பீரமாக காட்சியளிக்கிறது ஒரு ஆலமரம். இந்த மரத்தின் 107-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் சமீபத்தில், "இயற்கை பசுமை திருவிழா" என்ற பெயரில் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில், நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் அபுபக்கர், மதுரை காமராஜ் பல்கலைக்கழக பேராசிரியர் நாகரத்தினம், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மீனாம்பாள்புரம் ராஜாஜி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். கேக் வெட்டி கொண்டாட்டம் மரத்தின் முன்பாக 107 வயது எனக் குறிப்பிடப்பட்ட பெரிய கேக் வைக்கப்பட்டு, மாணவர்கள் வாழ்த்துப் பாடல்களைப் பாடி உற்சாகமாகக் கேக் வெட்டி கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பாதுகாக்க கோரிக்கை மதுரை நகரில் சாலை விரிவாக்கம் மற்றும் பல்வேறு காரணங்களால் பல பெரிய மரங்கள் வெட்டப்பட்டு வரும் நிலையில், எஞ்சியிருக்கும் இந்த ஆலமரம் பல அரிய வகை பறவைகளின் புகலிடமாக விளங்கி வருகிறது. நகரின் வெப்பம் மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இத்தகைய மரங்களைப் பாதுகாப்பது அவசியம் என விழாவில் வலியுறுத்தப்பட்டது. மேலும், இந்த பழமையான மரத்தைச் சுற்றி குப்பைகள் கொட்டுவதைத் தடுத்து, அதன் வேர்களை மண்ணிட்டு மூடி முறையான தடுப்பு வேலி அமைத்து அரசு பாதுகாக்க வேண்டும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மரங்களை வெறும் மரமாகப் பார்க்காமல், மனித குலத்தைக் காக்கும் உயிர் நாடியாக மதித்து நடத்தப்பட்ட இந்த பிறந்தநாள் விழா மதுரை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/students-in-madurai-celebrated-the-107th-birthday-of-banyan-tree




