தரோபா, பாகிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரோபாவில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 311 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்திருந்தது. ஷான் மசூத் 88 ரன்களுடனும், சல்மான் ஆஹா ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷான் மசூத் 163 பந்துகளில் சதத்தை எட்டினார். அவர் அடித்த 7-வது சதம் இதுவாகும். அவருடன் இணைந்து நிதானமாக ஆடிய சல்மான் ஆஹா 20 ரன்னில் ஷமார் ஜோசப் பந்து வீச்சில் போல்டு ஆனார். அதன் பிறகு விக்கெட்டுகள் வேகமாக வீழ்ந்தன. அபாரமாக ஆடிய ஷான் மசூத் 109 ரன்னில் (184 பந்து, 12 பவுண்டரி) ஜஸ்டின் கிரீவ்ஸ் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 80.1 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 282 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்டின் கிரீவ்ஸ் 5 விக்கெட்டும். கெமார் ரோச், ஷமார் ஜோசப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 29 ரன்கள் முன்னிலையுடன் வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்கம் முதலே பாகிஸ்தான் வீரர்கள் துல்லியமாகப் பந்துவீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் சந்தர்பால் 35 ரன்கள் எடுத்தர். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். மூன்றாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்துள்ளது. ஷமார் ஜோசப் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 155 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/test-against-pakistan-west-indies-struggle




