புதுடெல்லி, போராட்டங்கள் நடைபெறும் சமயங்களில் கூட்டத்தை கட்டுப்பத்தும் காவலர்கள் பெயர் பேட்ஜ் அணிந்திருப்பதை கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது கடந்த 20-ந்தேதி, நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்த தொடங்கினர். இந்த போராட்டங்கள் தொடர்பாக ஏராளமானோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதனிடையே, மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகியதை தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து, நாட்டின் பிற பகுதிகளில் நடந்த போராட்டங்களும் முடிவுக்கு வந்தன. இந்த நிலையில், போராட்டங்கள் நடைபெறும் சமயங்களில் கூட்டத்தை கட்டுப்பத்தும் பணியில் ஈடுபடும் காவலர்கள் பெயர் பேட்ஜ் அணிந்திருப்பதை கட்டாயமாக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி போராட்டத்தின்போது காவல்துறையின் தடியடியில் காயமடைந்த ஐ.ஐ.டி. மாணவி ஒருவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/police-personnel-must-be-required-to-wear-name-badges-petition-in-the-supreme-court




