சென்னை, தமிழகத்தில் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாலநாகதேவி - சென்னை குற்றப்பிரிவு சி.ஐ.டி. காவல்துறை தலைமை இயக்குநராக (DGP) நியமனம். அபின் தினேஷ் மொடக் - சென்னை சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக நியமனம். வித்யா ஜெயந்த் குல்கர்னி - சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக நியமனம். எம். ராமமூர்த்தி - சென்னை சி.ஐ.டி. ‘கியூ’ பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமனம். பி.கே. அரவிந்த் - சென்னை சிறப்பு பிரிவு சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளர்-1 ஆக நியமனம். அர்பிதா ராஜ்புத் - சென்னை அண்ணாநகர் காவல் துணை ஆணையராக நியமனம். ஐ. ஈஸ்வரன் - சென்னை தமிழ்நாடு கமாண்டோ படை காவல் கண்காணிப்பாளராக நியமனம். எஸ்.ஆர். செந்தில்குமார் - நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்புக் குழும காவல் கண்காணிப்பாளராக நியமனம். வி. சரவணகுமார் - சென்னை பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) காவல் கண்காணிப்பாளராக நியமனம். டி. ரமேஷ் பாபு - திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக நியமனம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/10-ips-officers-transferred-in-tamil-nadu




