விருதுநகர், விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள உள்ளரங்க விளையாட்டு வளாகத்தை நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். உடற்பயிற்சிக்கூடம் எஸ்பிஐ அறக்கட்டளையின் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நவீன விளையாட்டு வளாகத்தில் பன்னோக்கு உள்விளையாட்டு அரங்கு, உடற்பயிற்சிக்கூடம், மேசைப்பந்தாட்ட அறை மற்றும் சதுரங்கம், கேரம் உள்ளிட்ட உள்விளையாட்டுகளுக்கான தனிப்பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. எஸ்பிஐ அறக்கட்டளை ஊரக மேம்பாட்டுத் திட்ட அறக்கட்டளை (SSRDPT) மூலம் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்கு எஸ்பிஐ அறக்கட்டளை ரூ. 3.96 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. இந்த வளாகம், அப்பகுதியின் விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, அடுத்த 30 ஆண்டுகளில் சுமார் 15,000 கல்லூரி மாணவர்களுக்கும் 30,000 கிராமப்புற இளைஞர்களுக்கும் பயனளிக்கும். திருச்சுழி மிளகாய் பதப்படுத்தும் மையம் திறப்பு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகில் உள்ள காரேந்தலில், இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ள குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் (GCAPL) ஒருங்கிணைந்த மிளகாய் பதப்படுத்தும் மையத்தை திறந்து வைத்தார். எஸ்பிஐ வேளாண்மையுடன் இணைக்கப்பட்ட இந்த நிறுவனம், இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி (SIDBI) அமைப்பின் திட்ட மேம்பாட்டு முன்முயற்சியின் கீழ், அரசு நிதியின் கீழ் இயங்கும் கலப்பு நிதி மாதிரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. சந்தை வாய்ப்பு இப்பகுதியின் புவிசார் குறியீடு பெற்ற சம்பா மிளகாய்க்கான மதிப்புக்கூட்டல், முறைப்படுத்துதல் மற்றும் சந்தை வாய்ப்புகளை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், கிராமப்புற தொழில்முனைவோரை வலுப்படுத்தவும், சாகுபடியை பதப்படுத்துதல், பிராண்டிங் மற்றும் சந்தை வாய்ப்புகளுடன் இணைக்கிறது. இந்த மையம் மிளகாய் பதப்படுத்துதல், சுத்தம் செய்தல், உலர்த்துதல், சேமிப்பு, பேக்கேஜிங் மற்றும் தர உத்தரவாதம் ஆகியவற்றை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து, மதிப்புக்கூட்டப்பட்ட மிளகாய் தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/nirmala-sitharaman-in-virudhunagar-participates-in-various-events




