எஸ்பிஐ வங்கியில் 9,124 கிளார்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 1,410 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்ற விவரங்கள் பின்வருமாறு: பணி விவரம்: ஜூனியர் அசோசியேட்ஸ் காலியிடங்கள்: மொத்தம் 9,124 பணியிடங்கள், தமிழ்நாட்டில் மட்டும் 1,410 கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி வயது வரம்பு: 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 02.04.1998 க்கு முன்பாகவோ, 01.04.2006 க்கு பிறகோ பிறந்தவராகவோ இருத்தல் கூடாது சம்பளம்: ரூ.24,050 முதல் ரூ.64,480 சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறை; முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு & உள்ளூர் மொழித்திறன் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையங்கள்: நாடு முழுவதும் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, திருப்பூர், வேலூர், விருதுநகர், விழுப்புரம் ஆகிய நகரங்களில் நடைபெறும். விண்ணப்ப கட்டணம்: ரூ.750 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க வரும் 31.08.2026 கடைசி நாளாகும். கூடுதல் விவரங்களுக்கு: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/education-and-employment/mega-recruitment-drive-at-sbi-9124-vacancies-who-can-apply




