சண்டிகர், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜிஜேந்திரா அரியானா மாநிலம் ரோக்டக் பகுதியில் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இருவருக்கு திருமணமாகி மனைவி, 4 வயதில் சுரபி என்ற மகள் உள்ளார். மதுபோதைக்கு அடிமையான ஜிஜேந்திரா அவ்வப்போது குடித்துவிட்டு மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். கைது இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு மதுபோதையில் இருந்த ஜிஜேந்திரா தெருவில் நின்றுகொண்டிருந்த தனது மகள் சுரபியை கடுமையாக தாக்கினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜிஜேந்திராவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். हरियाणा - रोहतक में शराब के नशे में धुत पिता ने हैवानियत की सारी हदें पार कर दीं, 4 साल की मासूम बेटी को उठाकर सड़क पर पटक दिया और थप्पड़ भी मारे, घटना के समय बच्ची की मां पड़ोस में जन्मदिन समारोह में गई थी, पूरी वारदात सीसीटीवी में कैद होकर वायरल हो गई। कंधे में फ्रैक्चर आने के… — Shakti Singh/शक्ति सिंह (@singhshakti1982) July 9, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/father-arrested-after-cctv-captures-assault-on-4-year-old-daughter




