டொராண்டோ, கனடா ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில் ரைபகினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். கனடா ஓபன் டென்னிஸ் கனடா ஓபன் டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் எலினா ரைபகினா (கஜகஸ்தான்), நவோமி ஒசாகாவுடன் (ஜப்பான்) மோதினார். அரையிறுதி 2 மணி 33 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் ரைபகினா 4-6, 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக் கில் நவோமி ஒசாகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். கோகோ காப் மற்றொரு காலிறுதியில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப்பை எதிர்த்து களம் இறங்க இருந்த பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து) இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகினார். இதனால் கோகோ காப் களம் காணாமலேயே அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் கோகோ காப்- ரைபகினா பலப்பரீட்சை நடத்துகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/tennis/canada-open-tennis-rybakina-advances-to-the-semi-finals




