லக்னோ, உத்தரப் பிரதேச அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, ஆகஸ்ட் 28-ல் வரவிருக்கும் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் பரிசாகக் கருதப்படுகிறது. ரக்ஷா பந்தன் பண்டிகை கடந்த 2017 ஆம் ஆண்டு உ.பி.யில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பெண்களுக்கு இலவச பயணத்தைத் தொடங்கினார். இலவச பயணம் இது குறித்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உபிஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனபடி ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு முதல் ஆகஸ்ட் 28-ம் தேதி இரவு வரை பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/raksha-bandhan-free-travel-for-women-in-government-buses-in-uttar-pradesh




