அயோத்தி, அயோத்தி ராமர் கோவிலில் சவன் ஜூலா மேளா மற்றும் கன் வாரியா யாத்திரையையொட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) சிறப்பு நிகழ்வுகள் நடைபறுகின்றன. இதற்காக தரிசனம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்படுவதாக கோவல் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி ஆகஸ்டு 8 முதல் 11-ந்தேதி வரையும், 23 முதல் 28-ந்தேதி வரையும் கோவில் வளாகத்தில் நுழைவதற்கு பக்தர்களுக்கு பாஸ் வழங்கப்படும். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் அனைத்து 6 கோவில்களிலும் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்படும். மேலும் தரிசன நேரத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த நாட்களில் 10 முதல் 15 லட்சம் வரை பக்தர்கள் தினந்தோறும் வருவார்கள் என எதிர்பார்ப்பதால் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/changes-in-security-arrangements-for-darshan-at-ayodhya-ram-temple




