திருவள்ளூர், திருநின்றவூர் விசிக பெண் கவுன்சிலரை கொல்லந் தூண்டிய வழக்கில் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆராக வந்த கள்ளக்காதலனை, கணவர் கூலிப்படையை வைத்து வெட்டிக் கொலை செய்ய திட்டம் தீட்டி காத்தி குந்தபோது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முற்பட்டபோது இருவர் பிடிபட்டனர். இதில் தப்பி ஓடிய கணவர் உள்ளிட்ட பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். விசக பெண் கவுன்சிலர் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தபிரபல ரவுடி ஜோசப் என்பவர் அதே பகுதியைச் சேர்த்த ஸ்டீபன்ராஜ் மனைவியும் விசிக கவுன்சிலரான கோமதி என்பருடன் கள்ளக்காதல் இருந்துவந்துள்து. இந்நிலையில் பலமுறை மனைவியை கண்டித்தும் கேட்காததாள் ஆத்திரத்தில் கவுன்சிலர் கோமதியை அவரது கணவர் ஸ்டீபன் ராஜ் 2023-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி வெட்டி கொலை செய்தார். இந்த கொலை வழக்கில் திருநின்றவூர் போலீசார் கோமதியின் கணவர் ஸ்டீபன் ராஜ், அஜித், ஜான் கள்ளக்காதலன் ரவுடி ஜோசப் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். பிரபல ரவுடி ஜோசப் இந்த வழக்கில் அனைவரும் ஜாமினில் வெளியே வந்தநிலையில் கள்ளக்காதலான பிரபல ரவுடி ஜோசப் மீது 10-க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள்நிலுவையில் இருந்து வருகிறது. இதில் ஒரு வழக்கில் கடந்த நான்கு தினங்களாக திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்துஇட்டுவந்துள்ளார். இதனைத் தெரிந்து கொண்ட ஸ்டீபன் ராஜ் தனதுமனைவியை கொலை செய்ய காரணமாக இருந்த கள்ளக்காதலன் ஜோசப்பை கூலிப்படை னவத்து கொலைசெய்யதிட்டம் தீட டியது, சைபர் கிரைம்காவல் துறை மூலம் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பிரனித்துக்கு தெரிய வந்ததை தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தனி சிறப்பு படை உஷார் படுத்தப்பட்டது. நீதிமன்றத்தில் வைத்து கொலை இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஜொசப்பை நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து கொலை செய்து விடுவது என முடிவு செய்து ஒரு ஆட்டோவில் கணவர் ஸ்டீபன் ராஜ்தலைமையில் ஆறுபேர்கொண்ட கூலிப்படையினர் பயங்கர ஆயுதங்களுடன் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தனர். ஆனால் ரவுடி ஜோசப் மதியம் மணி ஆகியும் நீதி மன்றத்தை விட்டு வெளி வராததால், அந்தகும்பல் திருவள்ளூர் அடுத்தவேடங்கிய நல்லூர் பகுதியில் மது அருந்த சென்றபோது தனி சிறப்புப் படை போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர் அப்போது கோமதியின் கணவர் ஸ்டீபன் ராஜ் உள்ளிட்ட மூவர் தப்பியோடிய நிலையில் திருநின்றவூர்பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (வயது 45) பிரபாகரன் (வயது 34) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். ஆட்டோவில் ஆயுதங்கள் கள்ளக்காதலன் ரவுடி ஜோசப்பை கொல்ல ஆட்டோவில் கொண்டு வந்த அரிவாள் போன்ற ஆயுதங்சுளைமற்றும் மிளகாய் பொடி பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா காட்சிகளில் வருவதுபோல் இச்சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/husband-arranges-to-have-his-wifes-alleged-killer-killed-by-mercenaries




