சென்னை, 2026 துலீப் டிராபி இறுதிப்போட்டி நாளை முதல் சென்னையில் நடைபெற உள்ளது. கிழக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டியில் இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணிக்கு 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரையிறுதியில் மத்திய மண்டலத்துக்கு எதிராக வைபவ் 92 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய அவர், இறுதிப்போட்டியிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திலக் வர்மா தெற்கு மண்டல அணிக்கு தலைமை தாங்குகிறார்.வடக்கு மண்டலத்துக்கு எதிரான அரையிறுதியில் திலக் அரைசதம் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். தெற்கு மண்டலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு வந்தது. மேலும் முகமது சிராஜ் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரும் தெற்கு மண்டல அணியில் இணைந்துள்ளனர். ஆரம்பத்தில் கே.எல். ராகுல் தெற்கு மண்டல அணிக்காக இறுதிப்போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்திய தகவலின்படி அவர் இறுதிப்போட்டியில் விளையாடவில்லை தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/duleep-trophy-final-which-key-players-are-playing




