தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந்தியாவில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி, “பிரிக்ஸ் அமைப்பு தனது மூன்றாவது தசாப்தத்தில் காலடி எடுத்து வைக்கிறது. இந்த வேளையில், பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன். பிரதமர் மோடிBRICS: மோடி -புதின் சந்திப்பு; புதினுக்கு 'திருக்குறள்' புத்தகம் Gift - என்ன பேசினார்கள்? 3 வேண்டுகோள்கள் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே வர்த்தகத்திற்குத் தடையாக இருக்கும் முதன்மையான பத்து சிக்கல்களை நீக்குவது குறித்து ஒரு விரிவான அறிக்கையை உங்களால் தயார் செய்ய முடியுமா? நமது உறுப்பு நாடுகளைச் சேர்ந்த ஆண்டுக்கு 100 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பிற பிரிக்ஸ் நாடுகளின் சந்தைகளிலும் தடம்பதித்து வளர நம்மால் உறுதுணையாக இருக்க முடியுமா? நமது தொழிலமைப்புகளுக்கு இடையே ஆயிரம் புதிய கூட்டு ஒப்பந்தங்களை உருவாக்க முடியுமா? இந்த மூன்று இலக்குகளின் முன்னேற்றம் குறித்து நாம் ஒவ்வோர் ஆண்டும் மறுஆய்வு செய்ய வேண்டும். பிரிக்ஸ் அமைப்பின் லட்சியங்களைச் செயல்பாடுகளாகவும், நமது கூட்டு வலிமையை உலகளாவியப் பிரச்னைகளுக்கான தீர்வுகளாகவும் மாற்றுவோம். பிரிக்ஸ் அமைப்பு முன்னெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், உலகையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லட்டும்” என்று பேசியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/modi-sets-three-economic-goals-for-brics-countries



