லாகூர், இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் மோசமான தோல்வி மற்றும் ஒழுங் கீன புகார்கள் எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ் வான், இமாம் உல்-ஹக், சல்மான் ஆஹா உள்பட 7 வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டதுடன் உடனடியாக தாயகம் அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் வீரர்களின் ஓய்வறை ரகசியங்கள் ஊடகங்களில் கசிந்தது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்த புகாரின் பேரில் முகமது ரிஸ்வான், இமாம் உல்-ஹக் ஆகியோரிடம் அந்த நாட்டின் தேசிய சைபர் கிரைம் குற்றப்பிரிவு முகமை சுமார் 4 மணி நேரம் நேற்று கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது. விசாரணையின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளிக்க அவர்கள் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளனர். இவ்விரு வீரர்கள் மீதான எந்தவொரு குற்றச்சாட்டையும் சைபர் கிரைம் குற்றப்பிரிவு முகமை இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/questioning-of-pakistan-cricketers




