நாம் தமிழர் கட்சியில் புதிதாக 1,000 பேர் இணையும் நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட். 2) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "நடிகருக்கும் தலைவருக்கும் வித்தியாசம் தெரியாத தறுதலைக் கூட்டம், நடிகனிடம் ஆட்சியை கொடுத்துவிட்டார்கள். சீமான் பிளாக்கில் டிக்கெட் விற்ற கூட்டம் எங்களை திரள்நிதி கூட்டம் என்கிறார்கள். சீமான் பென்ஸ் கார் வாங்கிவிட்டார் என்று சொல்கிறார்கள். என்னுடைய மாமா ஒருத்தர் கார் வாங்கி கொண்டு வந்து வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு சென்றார். திரள்நிதி திருடர்கள் என்கிறார்கள், திரள்நிதியில் ஒரு தேநீர்கூட அருந்தமாட்டோம். திமுக செய்த வெறும் விளம்பர அரசைத்தான், இவர்களும் செய்கிறார்கள். மக்கள் காசை வீணடிக்க மாட்டோம் என்றவர்கள் பேருந்து நிலையங்களில் விளம்பர பதாகை வைத்துள்ளார்கள். இவ்வளவு கோடிகளை செலவழித்து எதற்கு தெருத்தெருவாய் விளம்பரம். விளம்பர அரசுதான்.ஒன்லி ரீல்ஸ் தான். சீமான் ஆட்டம் மாறி மாறி வரும். இந்த ஆட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் கால்களுக்கு வந்த பந்து எங்கள் கால்களுக்கும் ஒருநாள் வரும். பார்த்து பேச வேண்டும். இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள் என்று காத்து இருக்கிறேன். வெறியோடு காத்துக்கொண்டிருக்கிறேன்" என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/ntk-seeman-about-by-election-and-tvk




