சீனாவில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. 2020 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, சீனாவில் திருமண வயதுடைய பெண்களை விட சுமார் 2 கோடி ஆண்கள் அதிகமாக உள்ளனர். ஆயிரன் யுவான்களை செலவிடும் சீனர்கள் இதனால் சீனர்கள் ஏழை நாடுகளைச் சேர்ந்த இளம் பெண்களை, குறிப்பாக வங்காளதேச பெண்களைத் திருமணம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். சீன ஆண்கள் ஒரு மனைவியைக் கண்டுபிடிப்பதற்காக ஆயிரக்கணக்கான யுவான்களைச் செலவிடுகிறார்கள். ஆனால் வங்காள தேசம் உள்ளிட்ட வெளிநாட்டு மணப்பெண்கள் பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டம்பிடித்து விடுகின்றனர். இதனால் சீனாவில் ஆண்கள் பாதிக்கப்படுகின்றனர். தூதரகம் அவசர எச்சரிக்கை இந்தச் சூழலில், சீனத் தூதாகம் ஓர் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. வெளிநாடுகளில் நடக்கும் திருமண மோசடி மற்றும் ஆட்கடத்தல் கும்பல்களுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக, இடைத்தரகர்களின் வார்த்தைகள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் சந்தித்த நபர்களின் அடிப்படையில் சட்ட விரோதத் திருமணங்களில் ஈடுபட வேண்டாம். வங்காள தேச பெண்கள் அழகில் மயங்காதீர்கள். வெளிநாட்டு பெண்களை மணப்பது உள்ளூர் சட்டங்களை மீறுவதற்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/dont-buy-brides-chinas-bangladesh-embassy-warns-as-trafficking-surges




