சிறுதானிய உணவுகளின் மகத்துவத்தை மக்கள் அதிகம் அறிந்து வருவதால், கேழ்வரகு போன்ற சிறுதானியங்களில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவற்றில் சுவையும் சத்தும் நிறைந்த சிற்றுண்டி கேழ்வரகு பிஸ்கட். கேழ்வரகு பிஸ்கட் வீட்டிலேயே மிக எளிதாக தயாரிக்கலாம். இதற்கு கேழ்வரகு மாவு – 1 கிலோ, சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை – ½ கிலோ, நெய் அல்லது வெண்ணெய் – ½ கிலோ, கான்பிளவர் மாவு – 1 ஸ்பூன், பேக்கிங் சோடா – ¼ ஸ்பூன் தேவை. ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, சர்க்கரை, நெய் (அல்லது வெண்ணெய்), கான்பிளவர் மாவு மற்றும் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். மாவை சிறிது நேரம் ஓய்வெடுக்க வைத்து, பின்னர் விருப்பமான பிஸ்கட் வடிவத்தில் வெட்டவும். ஃபோர்க் கரண்டியால் மேலே சிறிய துளைகள் போட்டால் பிஸ்கட் அழகாகவும் சமமாகவும் வெந்து வரும். வெண்ணெய் தடவிய பேக்கிங் தட்டில் பிஸ்கட்களை அடுக்கி, 150 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 30 நிமிடங்கள் ஓவனில் பேக் செய்யவும். நன்றாக ஆறிய பிறகு பயன்படுத்தலாம். இந்த பிஸ்கட்டை செய்யும்போது கேழ்வரகு மாவுடன் 30 முதல் 70 சதவீதம் வரை வாழை மாவு அல்லது மரவள்ளிக்கிழங்கு மாவு சேர்த்தும் தயாரிக்கலாம். இது பிஸ்கட்டின் சுவையையும் அமைப்பையும் மேம்படுத்தும். வாசனைக்காக ஏலக்காய் தூள் சேர்க்கலாம். மேலும், வறுத்த முந்திரி, வேர்க்கடலை அல்லது பாதாம் துண்டுகளை மாவில் கலந்து அல்லது பிஸ்கட்டின் மேல் தூவி பேக் செய்தால் சுவையும் சத்தும் கூடும். சத்தான கேழ்வரகு பிஸ்கட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கியமான சிற்றுண்டியாகும். காற்று புகாத டப்பாவில் சேமித்து பல நாட்கள் சுவையாக பயன்படுத்தலாம். சுவையான சௌ சௌ கடலைப்பருப்பு கூட்டு. வீட்டிலேயே எளிதாக செய்யலாம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/ampstories/photo-story/how-to-make-finger-millet-biscuits




