தூத்துக்குடி மாவட்டம் பட்டணமருதூரில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில், அப்பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவிலான பண்டைய சங்கு தொழிற்சாலை ஒன்று இயங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள பட்டணமருதூரில் சங்குகள், வளையல்கள், மணிகள் போன்ற சங்கு ஆபரணங்கள், சீன செலாடன் மட்பாண்டங்கள், பாண்டிய மற்றும் விஜயநகரப் பேரரசுகளின் நாணயங்கள் ஆகிய பொருட்கள் கிடைத்துள்ளன என்றும் தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்பட்டவற்றில் பட்டணமருதூர் தான் மிகப்பெரிய பண்டைய சங்குத் தொழிற்சாலை தளமாகும் என்றும் தொல்லியல் துறை கூறுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/cdx7lk07y9ko




