சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் கடந்த ஜூலை 29 ஆம் தேதி நடந்திருந்தது. இந்த கூட்டத்தில் 'லிமிடெட் டெண்டர்' தொடர்பான வாதத்தின் போது துணை மகேஸ் குமார் 'முதல்வருக்கு ஒரு நியாயம்.கவுன்சிலருக்கு ஒரு நியாயமா?' என கொதித்து பேசியிருந்தார். மகேஸ் குமார் சிறுசிறு பணிகளுக்கான லிமிடெட் டெண்டர் முறையை தவெக ஆட்சியமைந்தவுடன் நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் மாநகராட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை கூட செய்ய முடியவில்லை என மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறியிருந்தனர். 10 - 20 லட்சம் மதிப்பிலான லிமிடெட் டெண்டர்களை லோக்கலில் யார் நன்றாக வேலை செய்வார்களோ அவர்களுக்கு கொடுத்து மக்களுக்கு தேவையான வேலைகளை செய்து வந்தோம். ஆனால், இப்போது அப்படி லிமிடெட் டெண்டர்களை விட முடியவில்லை. கவுன்சிலருக்கான வார்டு மேம்பாட்டு நிதியையும் விடுவிக்காமல் இருப்பதால் மக்களுக்கான அடிப்படை பணிகளை கூட எங்களால் செய்ய முடியவில்லை என திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர்கள் குறைகளை கூறியிருந்தனர். CM Vijay இதுசம்பந்தமாக துணை மேயர் மகேஸ் பேசுகையில், 'என்னுடைய வார்டிலேயே லிமிடெட் டெண்டர் இல்லாமல் பள்ளமான சாலைகளை சரி செய்ய முடியவில்லை. துணை மேயரின் வார்டிலேயே இப்படியா என மக்கள் கேட்கின்றனர். எனக்கு பதில் சொல்ல முடியவில்லை. முதல்வரின் பெரம்பூர் அலுவலகம் சமீபத்தில் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. அதற்கு மட்டும் லிமிடெட் டெண்டர் விட்டீர்களே. அது மட்டும் எப்படி சாத்தியப்பட்டது? முதல்வருக்கு ஒரு நியாயம் கவுன்சிலர்களுக்கு ஒரு நியாயமா?' என்றார். முதல்வரின் பெரம்பூர் அலுவலகம் புனரமைக்கப்பட விடப்பட்ட டெண்டர் கோப்புகளையும் அவையில் எடுத்து காட்டினார் மாமன்ற கூட்டம் இதுசம்பந்தமாக பதிலளித்த ஆணையர் சமீரன், 'லிமிடெட் டெண்டர்கள் எங்கேயும் நிறுத்தி வைக்கப்படவில்லை. 10.06.2026 அன்று லிமிடெட் டெண்டர்களுக்கான வரைமுறைகள் வெளியிடப்பட்டது. அதை பின்பற்றி லிமிடெட் டெண்டர்களை விட எந்தத் தடையும் இல்லை' என்றார் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/tender-row-explodes-in-chennai-corporation-councillor-questions-double-standards-in-governance




