சென்னை, கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடைபெற்ற ஆய்வு இன்று நிறைவடைந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) Burnt Memory/Microcontroller-ஐ ஆய்வு செய்து சரிபார்க்கக் கோரி, அத்தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் மு.க. ஸ்டாலின் விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் கடந்த மாதம் 29-ஆம் தேதி திறக்கப்பட்டு, விண்ணப்பதாரர் மற்றும் பிற வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டது. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவன பொறியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், மாதிரி வாக்குப்பதிவு மற்றும் VVPAT சீட்டுகள் சரிபார்க்கப்பட்டதில் எந்தவித முரண்பாடும் இல்லை என்றும், அனைத்து EVM-களும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி முறையாக செயல்பட்டன என்றும் சான்றளிக்கப்பட்டது. இந்த ஆய்வு மற்றும் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்ததாக சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/inspection-of-kolathur-constituency-voting-machines-completed




