மும்பை, இந்திய ரெயில்வே நிர்வாகம் முதல் முறையாக 1.3 கி.மீ. நீளம் கொண்ட இரட்டை அடுக்கு கண்டெய்னர் ரெயிலை இயக்கி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மும்பை அருகே உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து குஜராத்தில் உள்ள வர்னாமா ரெயில் நிலையம் வரை இந்த ரெயில் இயக்கப்பட்டது. நேற்று மாலை 7 மணிக்கு, 360 கண்டெய்னர்களை ஏற்றிக் கொண்டு ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் சுமார் 422 கி.மீ. தூரத்தைக் கடந்து, வதோதரா மண்டலத்தில் உள்ள வர்ணமா ரெயில் நிலையத்தை அடைந்தது. இதில் 'டபுள்-ஸ்டாக்' (double-stack) எனப்படும் அடுக்குமுறை சரக்கு ரெயில் பெட்டிகள் கொண்ட தொகுப்புகள் இணைக்கப்பட்டு, ஒரே நீண்ட தூர ரெயிலாக இயக்கப்பட்டது. ஒவ்வொரு தொகுப்பும் 180 கண்டெய்னர்களைக் கொண்டிருந்ததால், அந்த ரெயிலின் மொத்த கொள்ளளவு 360 கண்டெய்னர்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/indian-railways-operated-a-13-km-long-double-stack-container-train-for-the-first-time




