கொழும்பு, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று இலங்கை சென்றுள்ளார். இலங்கை பயணம் 3 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று இலங்கை சென்றுள்ளார். தனி விமானம் மூலம் இலங்கை சென்ற ராஜ்நாத் சிங்கை அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர். இந்த பயணத்திபோது பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய, பாதுகாப்புத்துறை செயலாளர் சம்பத் தூயகொந்தா ஆகியோரை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. 38 ஆண்டுகளுக்குப்பின் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/indian-defence-minister-rajnath-singh-arrives-in-sri-lanka




