புதுடெல்லி இந்தியாவில் ரூ.100 கோடிக்கு கூடுதலாக வருவாய் ஈட்டும் தனிநபர்களின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்து உள்ளது. நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த நிதி துறைக்கான மத்திய இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி, 2025-26 ஆண்டில், இந்தியாவில் ரூ.100 கோடிக்கு கூடுதலாக வருவாய் ஈட்டும் தனிநபர்களின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்து உள்ளது. இது, 2021-22 ஆண்டின்போது 142 என்ற அளவில் இருந்தது என பதிலளித்து உள்ளார். இதனால், கணக்கெடுப்புக்கான கடந்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்து உள்ளது தெரிய வருகிறது. எனினும், வருமான வரி சட்டம், 2025-ன்படி கோடீசுவரர் என்ற வரையறை எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சொத்து விவரங்கள் 100 கோடிக்கும் கூடுதலாக சொத்துகள் வைத்திருக்கும் நபர்களின் விவரங்களை அரசு பராமரிக்கின்றதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சொத்து வரி சட்டம், 1957 ஆனது, 2016-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நீக்கப்பட்டு விட்டது. இதனால், வரி செலுத்துவோரின் மொத்த சொத்து விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை, தொடர்ந்து பராமரிக்கும் பணி எதனையும் அரசு மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். இதில், 5 ஆண்டுகளில் முதன்முறையாக 2025-26 ஆண்டில், ரூ.100 கோடிக்கு கூடுதலாக வருவாய் ஈட்டும் தனிநபர்களின் எண்ணிக்கை 500-ஐ விட உயர்ந்து உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/rs-100-kodikku-kooduthalana-varuvai-thaninaipar-ennikkai-5-aandugalil-4-madangaga-athigarippu-arasu-thagaval




